23 இன 550 உயிரினங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயட்சி!! -ரஷ்ய நாட்டு பிரஜைகள் கைது-
ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை இலங்கையில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட 3 ரஷ்ய நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள், தேள்கள், தவளைகள், பள்ளிகள், நத்தைகள், சிலந்திகள், பாம்புகள் உட்பட 550 உயிரினங்களை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்த பெட்டிகளில் அடைத்து அவர்கள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கையிலேயே வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.