Tue. May 21st, 2024

யாழ் தாவடியில் வீடொன்றிலிருந்து இரு வாள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு வாள்களை யாழ் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூரிய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த வீட்டினை இன்று அதிகாலை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் முன் முகப்பு சண் செட் பகுதியில் இருந்து இரண்டு கூரிய வாள்களை மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்