20 ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது!! -இறுமாப்பு பேச்சு பேசிய ரணில்-
ஜக்கிய தேசிய கட்சியை இன்னும் 20 ஆண்டுகளுக்கு எவராலும் அசைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறுமாப்புடன் தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில கட்சி தலைமையகம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை கருத்திற் கொண்டு எதிர்வரும் 5 ஆண்டுகளில் அபிவிருத்தியின் பலன்கள் கிடைக்கப்பெறும்.
ஐக்கிய தேசியக் கட்சியை எவரினாலும் தோற்கடிக்க முடியாது. எனவே, இம்முறை ஜனாதிபதி தேர்தல் தீர்மானம் மிக்கதாகும்.
கடந்த காலத்தில் அரசாங்கம் என்ற ரீதியில் சர்வாதிகார அடிப்படையில் செயற்படவில்லை எனவும் ஜனநாயக ரீதியிலாகும் என்றார்.