18 வயதுடைய யுவதி ஹெரோயினுடன் கைது
185மில்லி கிராம் ஹெரோயின் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் 18 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் உள்ள பெண் ஒருவர் ஹெரோயின் வைத்திருப்பதாக யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் 02.00 மணியளவில் நடைபெற்றது. குறித்த பெண்ணை பொலீஸார் கைது செய்துள்ளனர்