Fri. May 17th, 2024

16வயது மாணவிக்கும் சகோதரனுக்கும் வாள்  வெட்டு

16வயது மாணவிக்கும் சகோதரனுக்கும் வாள்  வெட்டபட்ட சம்பவம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மாணவி ஒருவருக்கு அவர்கள் சகோதரனுக்கும் வாள் வெட்டு தாக்குதல் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது 16 வயதான மாணவி வீட்டுக்கு செல்லும் வீதி பகுதியில் நிற்கும் சிலர் அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தினருக்கும் அவர்களுக்கும் இடையில் தொடர்ந்துபகை நீடித்து வந்தது. நேற்று மதியம் அந்த வீதியால் சென்ற மாணவியை வழிமறித்த கும்பல் அவரை வாளால் வெட்டி பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. மாணவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார் நேற்றிரவு அந்தப் வீதியால் வாள்வெட்டுக்கு இலக்கான மாணவியின் சகோதரன் சென்றபோதும் அவருக்கும் அந்த கும்பல்  தாக்குதலை நடத்தியது. இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்த இளங்கீரன் வயது 24 என்பவரை காயமடைந்துள்ளார் இதேவேளை தாக்குதல் நடத்திய தரப்பிலிருந்து 28 வயது 34 வயதுடைய இருவர் சிறிய காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்பொழுது சாவகச்சேரி பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்