Sun. May 19th, 2024

150 நாட்கள் பணியாற்றிய தற்காலிக ஊழியா்களுக்கு நிரந்தர அரச நியமனம்! உள்ளுராட்சி சபைகள் அசமந்தம்!

150 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் தற்காலிக பணியாளா்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைக்கு யாழ்.மாநகரசபை தவிா்ந்த வேறு எந்த உள்ளுராட்சி சபைகளும் விபரம் சமா்பிக்கவில்லை.

உள்ளூராட்சி சபைகளில் பல பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றும் நிலையில் வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகளில் யாழ்.மாநகர சபை தவிர்ந்த ஏனைய சபைகள் எவையும் இது தொடர்பான விபரங்களை கையளிக்கவில்லை.

இதேநேரம் பிறிதொரு சபை பெயர் விபரங்களை அனுப்பியுள்ளபோதும் அவர்களும் தினவரவு உள்ளிட்ட விபரங்கள் சமர்ப்பிக்காத நிலையில் விபரம் முழுமை பெறவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேபோன்று பல ஆண்டுகளிற்கு முன்னரும் நியமனத்திற்கான ஏற்பாடுகள் செய்திருந்த சமயம் அதிகாரிகள் தினவரவு தொடர்பில் கையாண்ட முறமையினாலேயே சந்தர்ப்பம் இழந்ததாக கூறப்பட்ட நிலையில்

தற்போதும் உள்ளூராட்சி மன்றங்கள் அசமந்தப்போக்கே கடைப்பிடிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்