Fri. May 17th, 2024

ஹர்த்தாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்மராட்சியில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

எதிர்வரும் 20ம் திகதி வடக்கு கிழக்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தமிழ் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்
“என்றும் மக்கள் நலனில் அக்கறையுள்ள தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு” எனும் அமைப்பினால் ஹர்த்தாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்மராட்சி பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த துண்டுப் பிரசுரத்தில்
தென்மராட்சி பிரதேச மக்களுக்கானது…
எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே…
இப்போதுள்ள பொருளதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹரத்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்?
இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?
* காலங்காலமாக போடப்பட்ட ஊர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன?
* தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று.
நாட்டில் தொடரும் வங்குரோத்து நிலையில் வியாபாரிகள் வியாபாரம் இல்லாது அல்லாடி வரும் நிலையில் இவ்வாறான கடையடைப்பின் மூலம் கிடைக்கப்போகும் நன்மை என்ன என வியாபாரிகளும் விசனம் தெரிவித்து வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடர்களைக் கடந்து மீண்டு வந்த மக்களுக்கு அடுத்த பேரிடியாக பொருளாதாரா நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து மீள முடியாமல் மக்கள் திண்டாடி வரும் நிலையில் இவ்வாறான ஹர்த்தால்
எவ்வகையில் நியாயமானது?
ஒன்று சேர முடியாத தமிழ் கட்சிகள் தமிழர்களின் அபிலாசைகளை எப்போது நிறைவேற்றுவார்கள்? தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நாடகமாடும். இவர்களின் செயற்பாடு மக்களுக்கு எதையுமே பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பது திண்ணம்,
அரசியல் கட்சிகள் தங்களது இருப்பிற்கும் வாக்கு வங்கியை சரிய விடாமல் காப்பாற்றுவதற்குமே இவ்வாறான வேலைத்திட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிந்தித்து செயற்படுங்கள்.
என்றும் மக்கள் நலனில் அக்கறையுள்ள தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு.
என குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்