Tue. May 14th, 2024

ஹக்கிமுக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு!! -பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு-

அமைச்சர் ரவுப் ஹக்கிற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி முன்னாள் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம் சியாட் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியாக இருந்த காலப்பகுதியிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை பார்வையிட சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும்; அது தொடர்பில் அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் அதற்கு எதிராகவே காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்