தபால் வாக்களிப்பு வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுத்த 2 ஆசிரியர் உட்பட மூவர் கைது
தபால் மூல வாக்குப்பதிவின் போது, நேற்று தபால் வாக்களிப்பு வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுத்ததற்காக இரண்டு ஆசிரியர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நபர்கள் கெகிராவா, கம்பளை மற்றும் கட்டுகஸ்தோட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளர் வாக்களிக்கும் போதோ அல்லது வாக்கு சீட்டுகளை படமெடுத்தால் சிறை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தமை தெரிந்ததே