Sun. May 19th, 2024

வீதியோரத்தில் சடலமாக காணப்படும் ஆண் யார்?

வவுனியா, பறயனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்படும் இவர் யாரென அடையாளம்காண முடியவில்லை . அவரது உறவினர்களை சென்றடைய உதவுங்கள்.

வவுனியா பறயனாளங்குளம் பகுதியில் ஆணின் சடலமொன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பறயனாளங்களத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் காணப்படுவதாகவும் குறித்த நபர் அப்பகுதிக்கு பேரூந்தில் வந்து இறங்கியதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதுவரையில் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் பறயனாளங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்