பங்களாதேஷில் முல்லைத்தீவை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த முன்னால் போராளி ஒருவர் ஐரோப்பிய நாட்டிற்கு செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி ஆசிய நாடு ஒன்றில் நின்றவேளை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா காலகட்டத்தில் வெளிநாடு செல்வதற்காக ஆசிய நாடுகளில் பல இளைஞர்கள் அகப்பட்டு கொண்டுள்ளார்கள்.
இன்னிலையில் சுடர் அல்லது குமரன் என்று அழைக்கப்படும் 44 அகவையுடைய முன்னாள் போராளியான இவர் ஒரு காலினை இழந்த நிலையிலும் வெளிநாடு செல்வதற்காக சென்ற வேளை பங்காளதேச நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டிசுட்டான் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர்