Sun. May 19th, 2024

விவசாயிகள் விளைபொருட்களை கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

நெல்லியடி மரக்கறி சந்தையின் விவசாயிகள் விளைபொருட்கள்  விற்பனை  பகுதிக்கான புதிய கட்டட பகுதி நேற்று வெள்ளிக்கிழமை  திறந்து  வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படது.

கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் பரஞ்ஜோதி ஆகியோரால்  திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் பலர் தமது விளை பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதில் பெரும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இக்குறையைத் தீர்ப்பதற்காக சபையின் வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 15 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்