Fri. May 17th, 2024

விறுவிறுப்பான ஆட்டத்தில் நீர்வேலி காமாட்சி அம்பாள் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி.

கைதடி தெற்கு சன சமூக நிலையத்தின் 64வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும்
அமரர் சின்னத்தம்பி பரமேஸ்வரி ஞாபகார்த்தமாக அவர்களின் மகன்கள் சசிகரன்
மற்றும் ரசிகாந்தன் ஆகியோரின் ஆகியோரின் அனுசரணையில் யாழ் மாவட்ட பி பிரிவு
அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் நீர்வேலி காமாட்சி அம்பாள் அணி
இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.
நேற்று வியாழக்கிழமை மின்னொளியில் நடைபெற்ற பி பிரிவினருக்கான  ஆட்டத்தில்
நீர்வேலி காமாட்சி அம்பாள் அணியை எதிர்த்து தொண்டைமானாறு கலையரசி அணி மோதியது.
5 செற்கள் கொண்ட போட்டியில்
முதலாவது செற்றில் நீர்வேலி காமாட்சி அம்பாள் அணி 25:20 என்ற புள்ளிகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது செற்றில் தொண்டைமானாறு கலையரசி அணி
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் அபார ஆட்டத்தை
வெளிப்படுத்திய நீர்வேலி காமாட்சி அம்பாள் அணி 25:20, 25:23 என்ற புள்ளிகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்