Sun. May 19th, 2024

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் பருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் யோகலிங்கம் வயது 65 என்பவராவார்.  நேற்று முன்தினம் புதன்கிழமை காலை கற்கோவளம் மீன் சந்தைக்கு மீன் வங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்தில்  படுகாயம் அடைந்தார். வீதியில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த அவரை சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்