தொல் புரத்தில் கூரைபிரித்து நகை திருட்டு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை போலீசில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்ற சமயம் வீட்டில் உள்ள கூரையைப் பிரித்துஉள்ளே சென்ற திருடர்கள் வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் எடுத்துச் சென்றுள்ளார்கள். வீட்டு உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுஉள்ளார் . இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்