வித்தியானந்தா கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில்
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பயிற்றுநர் இ,சகீதரசீலன் மற்றும் முல்லைத்தீவு விளையாட்டு குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கல்லூரியின் விளையாட்டுத்துறையை வளர்க்கும் நோக்கில் கல்லூரியின் வேண்டுகேளிற்கிணங்க மேசைப்பந்தாட்ட மேசை மற்றும் வலைப்பந்தாட்ட கம்பங்கள் என்பன கையளிக்கப்படது. இந்நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கரைத்துறைப்பற்று விளையாட்டு அலுவலகர் கபிலன், முல்லைத்தீவு கலைமகள் பாடசாலை அதிபர் கமலகாந்தன் மற்றும் வித்தியானந்தா கல்லூரி பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.