Fri. May 17th, 2024

விடாது துரத்தும் மைத்திரி , ஓடி ஒழியும் தேசியப்பட்டியல் எம்.பிகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராகும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் , ஆனால் அதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாக இலங்கை சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்காக எந்தவொரு தேசிய பட்டியல் எம்.பி.யும் பதவியை ராஜினாமா செய்ய முன்வராததால் இந்த நிலைமை எழுந்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரி ஜனாதிபதியாக இருந்த பொழுது பதவியை ராஜினாமா செய்வதாக உறுதி அளித்த பலரும் பின்வாங்கி இருப்பதாகவும், சிலர் முன்னாள் ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிப்பதில்லை என்றும் , சிலர் தங்கள் தொலைபேசிகளை துண்டித்துவிட்டனர் என்றும் தெரியவருகிறது.

இந்த நிலையில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினருமான பௌசியை கட்சியை விட்டு நீக்குவதன் மூலம் அவரின் ஆசனத்தை பறித்து மைத்திரிபாலவை நாடாளுமன்றம் கொண்டு செல்ல முயற்சிகள் நடப்பதாக பௌசி குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்