Fri. May 17th, 2024

தானும் மகனும் ரணிலை நம்பி ஏமாந்துபோனோம். கவலையில் ஹேமா பிரேமதாச

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது மகன் சஜித் பிரேமதாசவை இப்படி நடத்துவார் என்று தான் கனவிலும் நினைத்ததில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச தெரிவித்தார்

தனக்கும் தனது மகனுக்கும் ரணில் விக்ரமசிங்க மீது பூரண நம்பிக்கை இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசாவின் நோக்கம் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வது மட்டுமே என்று அவர் கூறினார்.

இருப்பினும், ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு செயல்படுவார் என்று தெரிந்தால் தனது மகன் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடடிருக்க மாட்டார் என்றும் அவர் கவலை வெளியிட்டார்
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சஜித் பிரேமதாசவை சந்திக்க வந்த அரசியல் நண்பர்கள் குழுவிடம் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்