Fri. May 17th, 2024

வாள்வெட்டு தாக்குதலாளிகள் மோட்டார் சைக்கிள்களை போட்டுவிட்டு தலைதெறிக்க ஓட்டம்-கொட்டடியில் சம்பவம்

யாழ் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலையடுத்து ஊரவர்கள் ஒன்று சேர்ந்து துரத்திச்சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஏழுக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வாள்வெட்டு கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் ஊர் இளைஞர்களால் சேதமாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் எடுத்துச்செல்லப்படுள்ளது .
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்