Fri. May 17th, 2024

வாள்கள் சகிதம் கொள்ளையர் கும்பல் பெரும் அட்டகாசம் கந்தரோடையில் திருட்டு முயற்சி முறியடிப்பு

கந்தரோடை மடத்தடியில் முகத்தை கருப்புத் துணியால் மறைத்தவாறு வாள்களுடன் சென்ற திருட்டுக் கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளது. மேற்படி கொள்ளைக் கும்பல் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையிட முயன்ற போது வீட்டின் குடும்பத் தலைவரின் போராட்டத்தால் முயற்சி கைகூடாமல் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் சுன்னாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் குடும்பத் தலைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டில் பின்பக்கமாக கட்டப்பட்ட பழமையான கடா ஆடொன்றும் திருட்டுப் போய் இருந்தமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்