Fri. May 17th, 2024

யாழ் நகரிலுள்ள நான்கு நகைக்கடை உரிமையாளர்கள் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நகைக்கடை வைத்து இருக்கும் நான்கு உரிமையாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர்கள் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததோடு மட்டுமல்லாது திருடர்களுக்கு மேலும் உதவிகள் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  சமீபத்தில் யாழில் நகைத்திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் களவு எடுக்கும் நகைகளை விற்கும்நகைக் கடையை காட்டி உள்ளார். இதனை அடுத்து நடந்த மேலுமொரு விசாரணையில் மேலும் மூன்று நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்