Sun. May 19th, 2024

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து, 5 பேர் பலி, பலர் காயம். பஸ்க்கு தீவைப்பு

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன்  பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த சம்பவம் 23/2/2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது

சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிசார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ விபத்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தார்கள் அம்பியூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர்  உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுவரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

இந்த சம்பவத்தில் சாரதியின் இருக்கைக்கு அருகில் தீப்பிடித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர் எனினும் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்