தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!!
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் ஆரம்பமாகியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இக் கூட்டம் நடைபெறுகின்றது.
இக்கூட்டத்தின் போது ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்ப பற்றிய வியூகங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதனையடுத்து நண்பகலுடன் மத்திய குழுக்கூட்டம் நிறைவடையவுள்ளதோடு மாலை 5மணிக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.