வவுனியாவில் தனியார் நிதி நிறுவனங்களுக்கு சீல்
வவுனியாவில் கொவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட 5 தனியார் நிதி நிறுவனங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்பட்டதுடன் பலர் சுய தனிமைப்படுத்தல் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் பயணத் தடை காலத்தில் பொது மக்களை அழைத்து நிதி நடவடிக்கையில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனங்களே மூடப்பட்டுள்ளது.
வவுனியா பசார் வீதியில் இயங்கும் 2 நிதி நிறுவனங்களும், முதலாம் குறுக்குத்தெருவில் இயங்கும் 2 நிதி நிறுவனங்களும், புகையிரத நிலைய வீதியில் ஒரு நிதி நிறுவனமும் என 5 நிதி நிறுவனங்கள் இவ்வாறு சீல் வைத்து மூடப்பட்டன. வவுனியா பொலீஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பார்வையிடப்பட்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.