வவுனியாவில் காயங்களுடன் முதியவரின்சடலம் மீட்பு
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை அடையாளப்படுத்தியது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் குறித்த சடலத்தை வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பெளசானா நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார். சம்பவத்தில் க.இந்திரகுமார் வயது 75 என்ற நபரே சடலமாக மீட்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது