Sun. May 19th, 2024

கணவன் மனைவி மீது வீடு புகுந்து தாக்குதல்

ஆயுதங்களுடன் வந்த வன்முறைக் குழு வீடு புகுந்து தாக்கியதில் வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று தென்மராட்சி மறவன்குளம் மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த ஆயுத கும்பல் தடிகள் மற்றும் பொல்லுகளால் தாக்கியதில் மத்திய பகுதியை சேர்ந்த 45 வயதுடைய யசோதரன் மற்றும் அவரது மனைவியான 37 வயதான தர்ஷினி ஆகியோர் தாக்குதலில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தி வந்த கும்பல் 6 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப்பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்