வல்வை குண்டுவெடிப்பு தொடர்பாக நீர்வேலி இளைஞன் கைது
வல்வை வெடிப்புச் சம்பவம் தொடர்பாக நீர்வேலி இளைஞன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்ற தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தின் பொழுது குண்டை தூக்கி பார்த்த வல்வை இராணுவ முகாமை சேர்ந்த அதிகாரி காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.