வல்வெட்டித்துறை நகரை சுத்தப்படுத்திய போலீசார்
டெங்கு நோய் நுளம்பு பெருக்கம் மற்றும் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வல்வெட்டிதுறை போலீசார் வல்வெட்டித்துறை பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இந்த நடவடிக்கையில் வல்வெட்டித்துறை பொதுமக்கள் இராணுவத்தினர் நகர சபை உத்தியோகத்தர்கள் இணைந்து பொது இடங்கள் மற்றும் வீதிகள் ஆகியவற்றை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டார்கள்.