வல்வெட்டித்துறையில் கிணற்றுக்குள் ஆயுதம் மீட்பு, மேலும் குண்டுகள் கிணற்றுக்குள்
இன்று வல்வெட்டித்துறை நெற்கொழு வைரவர் கோயில் அருகில் உள்ள கிணற்றில் T.56 ரக துப்பாக்கி ஒன்று கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இன்னும் மூன்று குண்டுகள் கிணற்றுக்குள் இருக்கின்றது என்று தெரியவருகிறது. தற்பொழுது வல்வெட்டித்துறை பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். நாளைய தினம் குண்டு செயலிழக்கும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்து குண்டு மீட்கப்படும் என தெரியவருகின்றது.