Sun. May 19th, 2024

வல்லை வெளியில் இரண்டாவது விபத்து, மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய பொலிஸ் அதிகாரியின் கார்

வல்லை இராணுவமுகாம் அருகாமையில் விபத்து நடந்து அரை மணி நேரத்துக்குள் இரண்டாவது விபத்து நடைபெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் சித்தானந்த ஜெயக்கொடி அவர்கள் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் வல்லை ராணுவ முகாமுக்கு முன்னால்  சென்று  கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டது. காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் ஓட்டிய கார் பலத்த சேதம் அடைந்தது.  மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு எவ்வித காயமும் இன்றி தூக்கி எறியப்பட்ட  நிலையில் இருந்துள்ளார். தற்பொழுது விசாரணைக்காக நெல்லியடி போலீஸில் அவருடைய சேதம்  அடைந்த மோட்டார் சைக்கிள்  தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்