கண்ணிவெடியகற்ற ஜப்பான் அரசு நிதி உதவி. இன்று உடன்படிக்கை கைச்சாத்து.
முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இரண்டிற்கு நிதி வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்தானது.
இன்று காலை முகமாலை குறித்த பகுதிக்கு விஜயம் மெற்கொண்ட ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள்
தொடா்பில் நேரடியாக பார்வையிட்டார். தொடர்ந்து 2020ம் ஆண்டு குறித்த பகுதியில் காணப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்வதற்கான நிதியை
வழங்குவதற்காக அவர் ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும். குறித்த விடயம் அடங்கிய ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.