Wed. May 22nd, 2024

வலை உற்பத்திச் தொழிற்சாலையை மேம்படுத்த நடவடிக்கை

வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இன்று  கொழும்பில் இச்சந்திப்பு நடைபெற்றது.
வடகடல் நிறுவனத்தினால் லுணுவில, வீரவல மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படுகின்ற வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,  வடகடல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சம்ந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், வலை உற்பத்தி தொழிற்சாலையில் இனங்காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட நிலையில், அவற்றை தீர்ப்பது தொடர்பான ஆலோசனைகளும் கடற்றொழில் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்