Fri. May 17th, 2024

வலைப்பந்தில் யூனியன் கல்லூரி அணியினர் அசத்தல்

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் இரு பிரிவுகளில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டங்கள் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான இறுயாட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.
இதில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி 12:5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். 3ம் இடத்தை அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியினர் பெற்றனர்.
20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான இறுயாட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடினர். ஆட்டநேர முடிவில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி 23:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். 3ம் இடத்தை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியினர் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்