Sat. May 18th, 2024

வரலாற்றுச் சாதனை படைத்தது யாழ் மாவட்ட ஆண்கள் அணி

கபடியில் ஜாம்பவானான வவுனியா மாவட்ட அணியை வீழ்த்தி யாழ் மாவட்ட ஆண்கள் அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினரால் மாவட்ட அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கபடிப் போட்டிகள் கிளிநொச்சி மாவட்ட பொது உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் சனிக்கிழமை  நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட அணியை எதிர்த்து வவுனியா மாவட்ட அணி மோதியது.
பல ஆண்டுகளாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற வவுனியா மாவட்ட அணியை எதிர்த்து யாழ் மாவட்ட அணி மோதியது. ஆட்ட ஆரம்பத்தில் யாழ் மாவட்ட அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். ஆனால் அதன் பின்னர் வவுனியா மாவட்ட அணியினருக்கு சாதகமாக ஆட்டம் மாறமுற்பட்டது. அதன் போது நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக யாழ் மாவட்ட அணியின் பார்வையாளர்களால் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டது. இறுதி ஒரு நிமிடம் இருக்கும் போது இருதடவைகளே வீரர்கள் முன்னோக்கி செல்லக் கூடிய வாய்ப்புகள் இருந்த போதிலும் 5 வீரர்கள் முன்னோக்கி சென்று விளையாடியமை நடுவர்களின் தீர்ப்பிற்கு பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் யாழ் மாவட்ட ஆண்கள் அணி 42:40 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்