வரணி வடக்கு அ.த.க பாடசாலையின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு
வரணி வடக்கு அ.த.க பாடசாலையின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு 17/1/2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் ந.வசந்தரூபன் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் திருமதி யசோதை சரவணபவன்
சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சோ.திருக்குமரன் கௌரவ விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரும் ஆசிரியருமான செ.பிரதாப் வைத்தியசாலைப் பணியாளர் திருமதி த.ஜீவாகரன் கைதடி தெற்கு சனசமூக நிலையங்களின் ஒன்றியத் தலைவர் இ கந்தசாமி சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான சி.பிரபாகரன் சு.கேதீஸ்வரன் தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ந திருவாசகன் பொதுச் சுகாதார பரிசோதகர் பரிசோதகர் ஆர்.நிஜன் அயற்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன.