வடமாகாணத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வடமாகாணத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இன்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 316 பேருக்கும், யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மன்னார் மாவட்டத்தில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த 7 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குமாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.