Sun. May 19th, 2024

வடமராட்சியில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக ஏமாற்றும் அரசியல் கட்சி

கடந்த சில மாதங்களாக வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு அரசியல் காரியாலயத்தில் இளைஞர்களை வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து தங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைப்பதாகவும்  விண்ணப்ப படிவங்களை ஒரு பையில் போட்டு தருமாறு கூறியிருந்தார்கள். இவர்கள் கூறியது போல் இளைஞர்கள் சகல ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள். இந்த  இளைஞர்களிடம் பணமும் பெற்றிருப்பதாக தற்பொழுது தெரிய வருகின்றது. தற்போது இளைஞர்களால் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சகலதும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு தாறுமாறாக கிடப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

வேலைவாய்ப்புக்காக அலையும் இளைஞர்களை தங்களுடைய அரசியல் தேவை மற்றும் பணத்தேவைகளுக்காக பயன்படுத்துவது மிகவும் வேதனையான விடயம் என்றும் இளைஞர்கள் இப்படியான பொய் பிரசாரங்கள் மற்றும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்