Fri. May 17th, 2024

வடமராட்சியில் கசிப்பு இருவர் கைது

நெல்லியடி பொலீஸ் பிரிவில் கசிப்பு வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இதன்படி இரு வேறுபட்ட இடங்களில் ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சற்று முன்னர் நெல்லியடி இரகசிய பொலீஸாருக்குக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்  உள்ள  பகுதியில் 3 லீற்றர் கசிப்பு வைத்திருந்ததன் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை துன்னாலை முனியப்பர் கோயிலடிப் பகுதியில் 1.5 லீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் நெல்லியடி பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்