Tue. May 14th, 2024

வகுப்பறைக்குள் பாாிய முதலை! முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் இன்று காலை பரபரப்பு.

செம்மலை மகாவித்தியாலய வகுப்பறைக்குள் முதலை ஒன்று புகுந்ததால் பாடசாலையில் பெரும் அமளிதுமளியானது.

மாணவர்கள் பாடசாலைக்குள் பிரவேசித்தபோது வகுப்பறை கட்டிடம் ஒன்றிற்குள் முதலை இருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்

குறித்த முதலையினை மீட்டுகொண்டுசென்றுள்ளார். 6.5 அடி நீளம் கொண்ட குறித்த முதலையினை முல்லைத்தீமாவட்டத்தில் உள்ள முதலைகள் சரணலாயத்தில் விட

கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்