Fri. May 17th, 2024

லயன்சிகா மற்றும் சஸ்மிதாவின் அபார கோல்களினால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மகாஜனா

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் சம்போஷ நிறுவனத்தின் அனுசரணையுடன் “சம்போஷ வெற்றிக்கிண்ணம்” ற்காக நடாத்தப்பட்ட 14 வயது பெண்களுக்கான தேசியமட்ட உதைபந்தாட்டத்தின் இறுதியாட்டத்திற்கு மகாஜனக் கல்லூரி அணி தெரிவாகியுள்ளது. குருணாகல் கவுசிகமுவ வித்தியாலயத்தை அரையிறுதி ஆட்டத்தில் எதிர்கொண்ட மகாஜனா 3:1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதன் அரையிறுதியாட்டம் பதுளை மாவட்டத்தில் உள்ள வென்னப்புவ அல்பிரட் பிரிஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று புதன்கிழமை  நடைபெற்றது.
ஆட்டம்  ஆரம்பமாகி 1 நிமிடத்தில் லயன்சிகா,.எதிரணி பின்கள வீராங்கனைகளுக்குள்ளால் இலாவகமாக பந்தை கொண்டுசென்று முதலாவது கோலை பதிவுசெய்தார். மீண்டும் 10 ஆவது நிமிடத்திலும் லயன்சிகா இரண்டாவது கோலையும் அற்புதமாக பெற்றுக்கொடுத்தார். முதல்பாதி ஆட்டம் 2:0 என நிறைவுபெற்றது. இரண்டாவது பாதியாட்டம் விறுவிறுப்பாக ஆரம்பமாகியது. கவுசிகமுவ வித்தியாலயம் கோல் பெறும் முயற்சியில் சளைக்காது போராடியது. பலத்த போராட்டத்தின் மத்தியில் முதலாவது கோலை பதிவுசெய்தது. விறுவிறுப்பாக ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மகாஜனாவின் சஸ்மிதா 3 ஆவது கோலை பதிவுசெய்து வெற்றியை  ஸ்திரப்படுத்திக் கொண்டார். ஆட்டநேர முடிவில் மகாஜனா 3:1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது.
காலிறுதிப்போட்டியில் பதுளை மத்திய கல்லூரியை சந்தித்த மகாஜனா 8:0 என அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்