Fri. May 17th, 2024

ரயில் மோதி முதியவர் பலி!! -யாழில் சம்பவம்-

யாழ் கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்வ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தபால் ரயில் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் மோதியதில் குறித்த நபர் படுகாய மடைந்தார்.

காயமடைந்தவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 50 வயது மதிக்கப்பத்தக்கவர் என்றும் கோப்பாய் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்