ரணிலை விசாரிக்க விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்!!
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என்று இராஜாங்க அமைச்சரும் அரசாங்க ஊடக பேச்சாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரிப்பதற்கு முன்னர் என்னை கொலை செய்வதற்கு ஆலோசனை வழங்கியமை தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு அவருக்கு விரைவில் அழைப்பு விடுக்கும் என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.