Tue. May 21st, 2024

யுத்தத்தை முடித்த பொன்சேகாவுக்கு உயர் பதவி: பயங்கரவாதிகள் தூக்கு மேடை!! -உறுதிமொழி எடுக்கும் சஜித்-

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கு மேடையில் ஏற்றப்படுவார்கள் என்று தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யுத்தத்துக்கு முடிவு கட்டிய சரத்பொன்சேகாவுக்கு உயர் பதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிட்டம்புவயில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன். மரண தண்டனையை அறிவித்தால் மட்டும்போதாது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க எமது புலனாய்வுத் பிரிவை பலப்படுத்த வேண்டும். கைது செய்யப்படும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும் மரண தண்டனையை வழங்குவோம்.

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாகஇ இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்போம் என்று இவ்வேளையில் நான் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

அந்தவகையில்இ யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவை நாம் எமது ஆட்சியில் பாதுகாப்புஇ சமாதானம் மற்றும் நல்லிணக்க அமைச்சராக நியமிப்போம் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்று காலி முகத்திடலில் நான் இந்த உறுதியை தைரியமாக மக்களுக்கு வழங்கியிருந்தேன். எம்மைப் பொறுத்தவரை நாட்டுக்கு சேவையாற்ற களமிறங்கியவுடன் நண்பர்கள்இ உறவுகள் என எதையும் நாம் கவணத்தில்கொள்ளக்கூடாது என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்