யாழ் விபத்தில் கணவர் பலி, மனைவி படுகாயம்
யாழ்ப்பாணம் ஏ9 செம்மணி வீதியில் நடைபெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த புவனேஸ்வரன் மனோஜ் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், அவரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீதியில் மோட்டார் சையிக்கிளில் பயணித்த இவர்களும், பொலீஸாரின் தண்ணீர் பவுஸரும் விபத்திற்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.