Wed. May 15th, 2024

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி

மாவட்ட அணிகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத்தில் யாழ் மாவட்ட அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

இன்று மன்னார் உள்ளக விளையாடரங்கில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட அணியை எதிர்த்து வவுனியா மாவட்ட அணி மோதியது.  நான்கு கால்பகுதி ஆட்டங்களாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கால் பகுதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால்  10:08 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் யாழ் மாவட்ட அணி முன்னிலையில் வகித்தனர். அடுத்த மூன்று கால் பகுதி ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய யாழ் மாவட்ட அணி 44:19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்