Fri. May 17th, 2024

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டத் தொடர் ஆரம்பம்

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினரால் நடாத்தப்படும் கரப்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இரவு 7 மணிக்கு மின்னொளியில் புத்தூர் கலைமதி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2020 ஆண்டுக்கான இத்தொடர் நாட்டில் ஏற்பட்ட  கொரோணா தாக்கத்த்தால் நிறுத்தி வைக்கப்பட்ட போட்டிகளே தற்போது ஆரம்பமாகவுள்ளது. பார்வையாளர்கள் சுகாதார முறைப்படி முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுவது கட்டாயமானது. பார்வையாளர்கள் வீரர்களின் வரவுககள் பதிவு செய்யப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மைதானத்திற்குள் உட்பிரவேசிக்க முடியாது. மிக நீண்ட காலத்தின் பின்னர் தொடங்கும் போட்டியினை சிறப்பாக நடாத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறு யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்