Sat. May 18th, 2024

யாழ் மாவட்ட இளைஞர் ஆண்கள் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி.

இறுதி நிமிடம் வரை திக் திக் ஆட்டம்,  பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்த ஆட்டம்,  பரபரப்பான ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் ஆண்கள் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

தேசிய மட்ட மாவட்ட இளைஞர் அணிகளுக்கிடையிலான ஆட்டம் யாழ் மாவட்டத்தில் நடைபெறவிருந்த போதிலும் சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கிற்கு மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற அரையிறுதியாட்டம் இரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக நடைபெற்றது.
இதன் அரையிறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து கேகாலை மாவட்ட இளைஞர் அணி மோதியது. இதில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் 9:9 என்ற சமநிலைப் புள்ளியைப் பெற்றனர். இதனால் தேலதிக நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் சம பலத்துடன் மேதிய போதிலும் யாழ் மாவட்ட இளைஞர் அணியினர் தமக்குக் கிடைத்த அரிய வாய்புக்களைத் தவற விட்டனர். இதனால் அவர்களின் வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் இரு அணிகளும் இறுதிவரை போராடினர். இருப்பினும் இறுதி நிமிடத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியின் நுட்ப முறையால் 13:12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இதன் இறுதியாட்டம் இன்று நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்