Sun. May 19th, 2024

யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு

யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்