Fri. May 17th, 2024

யாழ் உடுவிலில் புடையண் பாப்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சாவு!!

யாழ்.உடுவில் பகுதியில் புடையண்பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் உடுவில் – உடுவில் பகுதியினை சேர்ந்த சுமன்ராஜ் சுதர்சினி (வயது 28) என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு சுதர்சினி உணவு பரிமாறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் புடையண்பாம்பு தீண்டியுள்ளது.

பாம்பு தீண்டியதை கண்ட கணவன் உடனடியாக மனைவிக்கு முதலுதவி செய்த பின் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பெண் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்