Fri. May 17th, 2024

மருதானையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோ!!

கொழும்பு மருதானை பகுதியில் ஆட்டோ ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

மருதானை கொழும்பு வீதியின் ஆனந்தக் கல்லூரிக்கு அருகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இத்தீவிபத்தால் குறித்த வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயினை பெரும் சிரமத்திற்கு மத்தியில் அணைத்துள்ளனர். இருப்பினும் ஆட்டோ முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்